Surah 78: An-Naba — النبأ
عَمَّ يَتَسَآءَلُونَ
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
كَلَّا سَيَعْلَمُونَ
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
وَٱلْجِبَالَ أَوْتَادًۭا
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
وَجَنَّٰتٍ أَلْفَافًا
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًۭا
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
لِّلطَّٰغِينَ مَـَٔابًۭا
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًۭا
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًۭا وَلَا شَرَابًا
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
جَزَآءًۭ وِفَاقًا
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًۭا
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًۭا
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
حَدَآئِقَ وَأَعْنَٰبًۭا
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
وَكَوَاعِبَ أَتْرَابًۭا
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
وَكَأْسًۭا دِهَاقًۭا
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًۭا
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
Surah 79: An-Naziat — النازعات
وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
فَكَذَّبَ وَعَصَىٰ
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
فَحَشَرَ فَنَادَىٰ
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
فَأَمَّا مَن طَغَىٰ
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
Surah 80: Abasa — عبس
عَبَسَ وَتَوَلَّىٰٓ
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
وَهُوَ يَخْشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
بِأَيْدِى سَفَرَةٍۢ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
كِرَامٍۭ بَرَرَةٍۢ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَعِنَبًۭا وَقَضْبًۭا
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
وَزَيْتُونًۭا وَنَخْلًۭا
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
وَحَدَآئِقَ غُلْبًۭا
அடர்ந்த தோட்டங்களையும்,
وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا
பழங்களையும், தீவனங்களையும்-
مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
وَأُمِّهِۦ وَأَبِيهِ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
Surah 81: At-Takwir — التكوير
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
மலைகள் பெயர்க்கப்படும் போது-
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
வானம் அகற்றப்படும் போது-
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
فَأَيْنَ تَذْهَبُونَ
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
Surah 82: Al-Infitar — الإنفطار
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ
வானம் பிளந்து விடும்போது
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
கப்றுகள் திறக்கப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
كِرَامًۭا كَٰتِبِينَ
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
Surah 83: Al-Mutaffifin — المطففين
وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
لِيَوْمٍ عَظِيمٍۢ
மகத்தான ஒரு நாளுக்காக,
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ
'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ
அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
"இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ
(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ
(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ
அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ
(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
Surah 84: Al-Inshiqaq — الإنشقاق
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
வானம் பிளந்துவிடும் போது
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
وَيَصْلَىٰ سَعِيرًا
அவன் நரகத்தில் புகுவான்.
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا
அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
Surah 85: Al-Buruj — البروج
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ
(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.
فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
فِرْعَوْنَ وَثَمُودَ
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
Surah 86: At-Tariq — الطارق
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَأَكِيدُ كَيْدًۭا
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
Surah 87: Al-Ala — الأعلى
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
Surah 88: Al-Ghashiyah — الغاشية
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
Surah 89: Al-Fajr — الفجر
وَٱلْفَجْرِ
விடியற் காலையின் மீது சத்தியமாக,
وَلَيَالٍ عَشْرٍۢ
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا
இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
فَٱدْخُلِى فِى عِبَٰدِى
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
وَٱدْخُلِى جَنَّتِى
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
Surah 90: Al-Balad — البلد
لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٍۢ وَمَا وَلَدَ
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
وَلِسَانًۭا وَشَفَتَيْنِ
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
فَكُّ رَقَبَةٍ
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ
உறவினனான ஓர் அநாதைக்கோ,
أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
Surah 91: Ash-Shams — الشمس
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
وَنَفْسٍۢ وَمَا سَوَّىٰهَا
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
وَلَا يَخَافُ عُقْبَٰهَا
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
Surah 92: Al-Lail — الليل
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
وَلَسَوْفَ يَرْضَىٰ
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
Surah 93: Ad-Duha — الضحى
وَٱلضُّحَىٰ
முற்பகல் மீது சத்தியமாக
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
யாசிப்போரை விரட்டாதீர்.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
Surah 94: Ash-Sharh — الشرح
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
Surah 95: At-Tin — التين
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
وَطُورِ سِينِينَ
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
Surah 96: Al-Alaq — العلق
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
عَبْدًا إِذَا صَلَّىٰٓ
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
فَلْيَدْعُ نَادِيَهُۥ
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
Surah 97: Al-Qadr — القدر
إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
Surah 98: Al-Bayinah — البينة
لَمْ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلْبَيِّنَةُ
வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
رَسُولٌۭ مِّنَ ٱللَّهِ يَتْلُوا۟ صُحُفًۭا مُّطَهَّرَةًۭ
(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).
فِيهَا كُتُبٌۭ قَيِّمَةٌۭ
அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَةُ
எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.
وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَذَٰلِكَ دِينُ ٱلْقَيِّمَةِ
"அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்."
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ فِى نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ ۚ أُو۟لَٰٓئِكَ هُمْ شَرُّ ٱلْبَرِيَّةِ
நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ هُمْ خَيْرُ ٱلْبَرِيَّةِ
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.
جَزَآؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّٰتُ عَدْنٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۖ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهُۥ
அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.
Surah 99: Az-Zalzalah — الزلزلة
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
Surah 100: Al-Adiyat — العاديات
وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
Surah 101: Al-Qariah — القارعة
ٱلْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
مَا ٱلْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ
அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
نَارٌ حَامِيَةٌۢ
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
Surah 102: Al-Takathur — التكاثر
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
Surah 103: Al-Asr — العصر
وَٱلْعَصْرِ
காலத்தின் மீது சத்தியமாக.
إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
Surah 104: Al-Humazah — الهمزة
وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
Surah 105: Al-Fil — الفيل
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
Surah 106: Quraish — قريش
لِإِيلَٰفِ قُرَيْشٍ
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍۢ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
Surah 107: Al-Ma'un — الماعون
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
Surah 108: Al-Kauthar — الكوثر
إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
Surah 109: Al-Kafirun — الكافرون
قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
Surah 110: An-Nasr — النصر
إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
Surah 111: Al-Masad — المسد
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
Surah 112: Al-Ikhlas — الإخلاص
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
ٱللَّهُ ٱلصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
Surah 113: Al-Falaq — الفلق
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
Surah 114: An-Nas — الناس
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ ٱلنَّاسِ
(அவனே) மனிதர்களின் அரசன்;
إِلَٰهِ ٱلنَّاسِ
(அவனே) மனிதர்களின் நாயன்.
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.