بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.